
* பாலாவின் பெயர்இ பாலசுப்ரமணியன்.ஆனால்இ வீட்டில் அனைவரும் அழைப்பது அபேஸ் பாலையா. வீட்டில் காசு முதற்கொண்டு பொருட்கள் திடீர் திடீரெனக் காணாமல் போனதினால் கிடைத்த சிறப்புப் பட்டம் !
* பாலு மகேந்திராவுக்கும் சிவக்குமாருக்கும் பாலா மூத்த மகன். சேரனுக்குஇமருமகனே..... சீமானுக்குஇ இளையவரே.......ரோஹிணிக்குஇமகனே...விக்ரமுக்க ுஇ டார்லிங்....சூர்யாவுக்குஇ அண்ணா !
* மணிரத்னம்இ பாலாவின் ரசிகர்.பாலாவோ.....மணிரத்னத்தின் பக்தர்.இந்த அபூர்வ நட்பு அதிகம் வெளியே தெரியாது. பாலாவைச் சர்வதேச வெளிச்சத்துக்குத் தெரியாது. பாலாவைச் சர்வதேச வெளிச்சத்துக்குத் தள்ளுவதில் மணி சாருக்கு ஏனோ பிரியம் !
* இரண்டாவது வகுப்பு படிக்கும்போதே பீடி குடித்தவர்.....இப்போதும் புகைக் பழக்கம் தொடர்கிறது. யார் முன்னும் தயங்காமல் புகைப்பவர். மனைவி முன் மட்டும் சிகரெட்டைத் தொடவே மாட்டார் !
* விழாஇ நிகழ்ச்சி என பாலாவைக் கூப்பிட்டால்இ ஓடி ஒளிவார். மைக் முன் நிறுத்திவிட்டால்இ வாழ்த்துக்கள் என ஒற்றைச் சொல்லோடு மேடையில் இருந்து இறங்கிவிடுவார் !
* பாலாஇஎப்போதுமே அப்பா பிள்ளை. அப்பாவியாகவே வாழ்ந்தஇ ஐந்து வருடங்களுக்கு முன் இறந்துபோன அப்பாவின் நினைவு மேலெழும்பினாலோஇ அவரைப்பற்றிய பேச்சு கிளம்பினாலோஇ கண்ணீரில் நனைந்து அழுகையில் முடிவார் !
* மனிதப் பற்களால் ஆன கபால மாலையும்இஸ்படிக மாலையும் அணிந்திருப்பார். காசி சென்று திரும்பிய பிறகு ஏற்பட்ட மாற்றம் இது !
* நான்கு சர்வதேச விருதுகள்இ நான்கு தேசிய விருதுகள்இ ஐந்து மாநில விருதுகள்இ ஐஐ ஃபிலிம்பேர் விருதுகள்....இதுவரை பாலா இயக்கியிருக்கும் நான்கு படங்களுக்காகக் கிடைத்த விருதுகள் இவை !
* தியேட்டரில் படம் பார்க்கும்போது செல்போனில் பேசினாலோஇ எஸ்.எம்.எஸ். ஒலி எழும்பினாலோ பாலாவுக்குப் பிடிக்காது. செல்போனில் பேசுவதை நிறுத்துமாறு யாருடனும் சண்டை போடுகிற எல்லைக்குக்கூடச் செல்வார் !
* எப்பவும் காலில் அணிவது ரப்பர் காலணிகள் தான். வேறெந்த வகைக் காலணிகளையும் உபயோகிக்க மாட்டார் !
* அதிரடி ஹ்யூமர் சென்ஸ் உள்ளவர் பாலா.நண்பர்களோடு சேர்ந்தால்இ பழைய சினிமா பாடல்களும்இ அதிரடி மிமிக்ரியுமாகக் கலகலப்பு தான் !
* பாலா தீவிரமான நாத்திகர். ஆனால்இ அவர் மனைவி எப்போதுஇ எந்தக் கோயிலுக்கு அழைத்தாலும் மறுக்காமல் கிளம்பிப் போவார் !
* பாலாவுக்கு டி.வி. நிகழ்ச்சிகளில் பிடித்தவை. விஜய் டி.வி-யின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜுனியர். சன் டி.வி-யின் கலக்கப்போவது யாரு? வீட்டில் இருந்தால் இரண்டு நிகழ்ச்சிகளையும் தவறாமல் பார்ப்பார் !
* அதிகாலையில் பாலாவைத் துயிலெழுப்ப துணை ராணுவப் படையே தேவைப்படும்.அவரை எழுப்பி ஷீட்டிங்குக்குத் தயாராக்கக் குறைந்தது நான்கு பேராவது மெனக்கெட வேண்டும் !
* பாலாவுக்கு மிகவும் பிடித்தது தனிமை.அதே அளவுக்கு வேடிக்கை பார்ப்பதுஇவம்பிழுப்பதுஇ ஊர் சுற்றுவதும் பிடிக்கும் !
* ஈழத் தமிழர் மீது மிகுந்த அனுதாபம் உடையவர். புலித் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டதாகச் சொல்லப்பட்ட போதுஇ மனசு தாங்காமல் அழுதுகொண்டே இருந்தார். ஆனால்இ பிரபாகரன் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்று உறுதியாக நம்புகிறவர்களில் பாலாவும் ஒருவர் !
* பாலாவின் திருமண ஏற்பாடுகளின் போது அவரது மாமனார் கொஞ்சம் தயக்கம் காட்டஇ விளையாட்டாக பிதா மகன் வில்லன் ரோலுக்கு மகாதேவன் என்று மாமனார் பெயரை வைத்தது அக்மார்க் பாலா குறும்பு !
*பாலாவின் படத்தில்சன்ரைஸ் ஷாட் டை நீங்கள் பார்க்கவே முடியாது. அதிகாலையில் எழும் பழக்கம் இல்லாததால் நேர்ந்தது இது.ஆனால்இ சன்செட் காட்சிகள் ஏகமாகவே இருக்கும் !
* நண்பர்கள் மேல் பெரும் மரியாதையும்இ அன்பும் வைத்திருப்பவர். சமூகத்தின் பெரிய அந்தஸ்தில் ஆரம்பித்துஇ சாதாரண நிலைவரை நிறைய நண்பர்கள் அவர் தரப்பில் இருக்கிறார்கள் !
* பாலாவின் ஒருநாள் மெனு இதுதான்.காலையில் இரண்டு இட்லிஇமதியம் ஒரு கைப் பிடிச் சாதம்இஇரவு இரண்டு தோசைஇ ராத்திரி ரெண்டு தோசை சாப்பிட்டேன் ! என கண்கள் விரித்துச் சொல்வார் !
* சற்று இடைவேளைக்குப் பிறகு ஆர்யாஇ விஷால் நடிக்க கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் படம் செய்கிறார் பாலா. நிச்சயம் குறுகிய காலத் தயாரிப்பு. கலக்கலான காமெடிப் படமாமே !
* நான் கடவுள் படத்துக்காக ஆர்யாஇ பூஜா இருவரின் உழைப்புக்கு உறுதியான அங்கீகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தேசிய விருதுகள் குறித்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார் !
* இயக்குநர் மணிரத்னம்இ பின்னணிப் பாடகி சித்ரா ஆகியோரின் மலர்ந்த சிரிப்பினில் உயிரைத் தரிசிக்கிறேன் என்பார் பாலா. பாலாவுக்கு இஷ்டமான புன்னகை தெய்வங்கள் இவர்கள் !
* அப்பா பழனிச்சாமிஇசிவ பக்தர். அவர் 50 வருடங்களாகப் பூஜை செய்துவந்த குட்டி சிவலிங்கம் மட்டுமே பாலா இப்போது பொக்கிஷமாகப் பாதுகாக்கும் ஒரே பொருள் !
*மிகவும் பிடித்த இடம் பெரிய குளம். பின்னால் உறைந்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைகளின் விநோத அமைதியை எப்பவும் ரசிப்பவர் பாலா !
Wednesday, March 3, 2010
இயக்குனர் பாலா!
Posted by Jayakanthan R. at 6:53 PM
Labels: இயக்குனர் பாலா, சினிமா, செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment